Friday, December 30, 2011

New Office Bearers for the year 2012-2013.

பண்பாட்டு ஆய்வு மையம்
(ஸ்ரீ லலிதாம்பிகா அறக்கட்டளை)
5/11, சிவகாமி நகர், கோவை 641 007.

சுற்றறிக்கை

2012 – 2013 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு

அன்புடையீர்,

வணக்கம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.ஸ்ரீ லலிதாம்பிகை அறக்கட்டளையின் சார்பாக இயங்கி வரும் கோவை பண்பாட்டு மையத்தின் 2012-2013 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்சியுடன் அறிவிக்கின்றோம். இப்புதிய நிர்வாக்குழு அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு பொறுப்பிலிருக்கும். இதுவரை பணியாற்றி விடை பெறும் நண்பர்களுக்கு நன்றிகளும், பாராட்டுக்களும் உரித்தாகுக. புதிதாக பொறுப்பேற்கும் அன்பர்களை வணங்கி வரவேற்கின்றோம்.

2012-2013 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பின்வருமாறு:

தலைமை அறங்காவலர் : திருமதி.லீலாவதி சம்பத்குமார் அவர்கள்

இயக்குனர்: தவத்திரு.முனைவர் ஸ்ரீ ஜெகனாத சுவாமி

ஒருங்கிணைப்பாளர்: திரு.சு.கார்த்திகேயன், எம்.ஏ.எம்.ஃபில்.பிஎச்.டி.
பேராசிரியர், தத்துவம், சமயம் மற்றும் சமூகவியல் துறை, அமெரிக்கன் கல்லூரி, மதுரை.

முழுமை அறிவியல் துறை – தலைவர் : முனைவர் க.மணி, பேராசிரியர், பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரி, கோவை.

தொல்லியல் துறை – தலைவர் : திரு.தி.லெ.சுபாஷ் சந்திர போஸ்கல்வெட்டு மற்றும் குறியீடுகள் ஆய்வாளர், திருச்சி

திருமுறைகள் ஆய்வுத்துறை:
திரு.சண்முக திருவரங்க யயாதி, விருத்தாச்சலம்.

யோகா, சிலம்பம் மற்றும் தமிழர் வீர விளையாட்டுத்துறை – தலைவர்: திரு. கணேஷ் பாபு, எம்.ஏ.எம்.ஃபில். கோவை.

இதழியல் மற்றும் ஊடகவியல் துறை – தலைவர்-
திரு.இரா.குமார், எம்.ஏ.எம்.ஃபில். சென்னை.


புதிய அஞ்சல் வழி மற்றும் நேரடி வகுப்புகள் மற்றும் ஆய்வுகள் மேற்காணும் துறைகளில் விரைவில் ஆரம்பம் ஆகின்றன. தங்கள் மேலான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
தவத்திரு.முனைவர்.ஸ்ரீ.ஜெகநாத சுவாமி.

No comments:

Post a Comment